சேலம் மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலை பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இப்பணிக்கு 01.07.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. B.Ed கல்வித்தகுதியுடன் B.E. பட்டப்படிப்பு (கணினி அறிவியல்) அல்லது B.Sc. பட்டப்படிப்பு (கணினி அறிவியல்) அல்லது BCA பட்டப்படிப்பு அல்லது B.Sc.(தகவல் தொழில்நுட்பம்) ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.15,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சீனிவாசா காலனி, சூரமங்கலம், சேலம் - 636005 என்ற முகவரியில் 10.11.2022 மாலை 5 மணிக்குள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment