Friday, October 21, 2022

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆவின் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு


22.10.2022
ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைப்பதற்கான நிதி வழங்கும் திட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி பெறாதவராக இருக்க வேண்டும்.

தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  பெரம்பலூர் என்னும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04328 225474 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment