Tuesday, October 11, 2022

மயிலாடுதுறையில் அக்.13-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்



09.10.2022  மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதந்தோறும் 2-ஆவது

வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதார பணிகள் ஆகிய துறைகளை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

அவ்வகையில், மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அக்.13-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகள் குறித்து மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

மேலும், இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை நகல், மார்பளவு புகைப்படம் 1, கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment