Wednesday, October 12, 2022

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி


வேலூர் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலையில் போட்டி நடந்தது. இதில் மாற்றுத்திறன் கொண்ட 20 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் வாக்காளர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment