நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 17.58 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவியை, கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இதில், இளநகரில் உள்ள, சிவபாக்கியம் மனவளர்ச்சி குன்றிய, 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இல்லத்துக்கு, காலாண்டு பராமரிப்பு மானியமாக, 2 லட்சத்து, 46 ஆயிரத்து, 269 ரூபாய்; இளநகர் சிவபாக்கியம், திருச்செங்கோடு ஆன்றாபட்டி ஏலீம், என்.புதுப்பட்டி கலர்புல் சில்ரன்ஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர் ஊதிய மானியமாக, தலா, 1.62 லட்சம் ரூபாய்;
மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்ல பராமரிப்பு மானியமாக, 2.64 லட்சம் ரூபாய்; நாமக்கல்-மோகனுார் சாலை, நீயூ லைப் காதுகேளாத சிறார்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மைய பராமரிப்பு மானியம், 92 ஆயிரத்து, 500 ரூபாய் பெறுவதற்கான ஆணையை, கலெக்டர் ஸ்ரேயா சிங்
வழங்கினார்.
இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டத்தில், ராசிபுரம், குமராபாளையம், ப.வேலுார், வரகூர், ஏமப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, காக்காவேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நிதிஉதவி என, மொத்தம், 17 லட்சத்து, 58 ஆயிரத்து, 169 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) சந்திரமோகன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment