Friday, August 11, 2023

புதுகை மக்கள் குறைகேட்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்



புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ.63,500 மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள, மேக்னிபயர் என்ற கருவிகளும், செவித் திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ.13,500 மதிப்புள்ள திறன்பேசியையும் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 412 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு. செய்யது முகமது, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment