Wednesday, October 19, 2022

பல்கலை குழுக்களில் மாற்றுத் திறனாளிகள்



18.10.2022  சென்னை : அரசு பல்கலைகளில், காது கேளாத, வாய் பேச இயலாதவர் மற்றும் தொழு நோயாளிகளையும், 'சிண்டிகேட்' உள்ளிட்ட குழுக்களில் உறுப்பினராக்கும் வகையில், சட்டசபையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நேற்று தாக்கல் செய்த மசோதா:

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு எதிராக உள்ள சட்டங்களை திருத்தம் செய்ய கோரியுள்ளார். இந்திய தொழுநோய் அறக்கட்டளையும், இந்த கோரிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளது.

அதன்படி, மாற்றுத் திறனாளிகளும், மற்றவர்களுடன் சமமான உரிமையை, கண்ணியமான வாழ்க்கையை, அவர்களின் நாணயத்திற்கான மதிப்பை பெறுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் யாரும், இயலாமையின் காரணத்தால், பாகுபடுத்தல்படக் கூடாது.

காது கேளாத, வாய் பேச இயலாதவர் மற்றும் தொழுநோயால் துன்புறும் நபர்கள், பல்கலைகளின் அதிகார அமைப்புகளில் உறுப்பினராக தேர்வு செய்யவோ, நிர்ணயிக்கவோ, தமிழக பல்கலைகளின் சட்டம் வழிவகுக்கவில்லை.

எனவே, இந்த சட்டத்தை திருத்த, அரசு முடிவு செய்துள்ளது. இந்த திருத்தம், காது கேளாத, வாய் பேச இயலாதவர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பல்கலை ஆட்சி குழு, ஆட்சி பேரவை மற்றும் செயலாட்சி மன்றத்தில் உறுப்பினராக வழி செய்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அனைத்து அரசு பல்கலைகளில், தமிழக நிதித் துறை செயலர் ஒரு உறுப்பினராக இடம் பெறும் வகையில், பல்கலைகளின் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கும், நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.-




No comments:

Post a Comment