கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், காது கேளாதோர், வாய் பேசாதோர் பொருத்துநர் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2022ம் ஆண்டிற்கான கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி முதல், செப்டம்பர் 30ம் தேதி வரை மூன்று சுற்றுகளாக நடந்து முடிந்தது.
தற்போது அக்டோபர் 30ம் தேதி வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில், உளுந்துார்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மட்டும் தற்போது காலியாக உள்ள 10 இடங்கள் பொருத்துநர் (காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர்) தொழிற் பிரிவில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment