
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு 32% ஆக உள்ளது. அதாவது, 3ல் 1 பங்கு உற்பத்தியை இந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் இந்த எண்ணிக்கை 15% ஆக உள்ளது. கிட்டத்தட்ட 50 லட்சம் இந்த வகை தொழில் நிறுவனங்கள் மாநிலத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 1 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்த குறு நிறுவனங்கள் விழுக்காடு மட்டும் 99% ஆக உள்ளது. இந்த குறு நிருவனங்கள் தான் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து தந்து வருகின்றன. எனவே, இந்த வகை நிறுவனங்கள் தங்கு தடையின்று செயல்படவும், ஊக்கப்படுத்தவும் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
இதில், மிகவும் பிரபலமான முதலீட்டு மானியம் (Capital Subsidy) திட்டத்தைப் பற்றி இங்கு பாப்போம்.
உங்கள் முதலீட்டுக்கு மானியம்:
இந்த திட்டத்தின் கீழ் தகுதியான இயந்திரத் தளவாடங்களின் (Plant & Machinery Investment Total Cost) மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், மகளிர் /ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நடத்தி வரும் தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 5 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வழங்கப்படுகிறது.
குறு நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 10 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.
நடைமுறையில் உள்ள குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் முறையே சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக உயர்வு பெறும் பட்சத்தில் (Additional Capital Subsidy for Scaling Up)அந்நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 5 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், மாசற்ற மற்றும் சுற்றுச்சூலில் பாதுகாக்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வழங்கப்படுகிறது.
எனவே, தமிழ்நாட்டில் பெண் தொழிமுனைவோர் குறு நிறுவனங்கள் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட 1.70 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, மகளிர் /ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நடத்தி வரும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
யார் விண்ணப்பிக்கலாம்?
மாநிலத்தின் எப்பகுதியிலும் நிறுவப்படும், அனைத்து புதிய குறுத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள்
தமிழ்நாட்டின் எப்பகுதியிலும் அமைக்கப்படும் கீழ்கண்ட 24 சிறப்பு வகை சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்:
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 254 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்
மாநிலத்தின் 388 வட்டாரங்களில் அமைக்கப்படும் புதிய வேளாண்சார் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்
மேற்கண்ட வகைகளைச் சார்ந்த, தற்போது இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்களுக்கு இட்த்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.
யாரை அணுகுவது?
தமிழகத்தில் ஓவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் (District Industries centre) செயல்பட்டு வருகின்றன. இதன் தலைமை அலுவலகம், சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் செயற்பட்டு வருகிறது. மாவட்டத் தொழில் மையங்களைத் தொடர்பு கொள்ள
இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.