Wednesday, November 23, 2022

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கைப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்


20.11.2022 மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச கைப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டயப் படிப்பு, இளநிலை கல்வி பயிலும், சுயதொழில் புரியும், தனியார்துறையில் பணிபுரியும் 80 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட 18- 60 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கைப்பேசி வழங்கப்பட உள்ளது.

தகுதியுடையோர் தங்களது தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச் சான்று, சுயதொழில் புரிபவராயின் சுயத்தொழில் பதிவுக்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நவ.25 காலை 10.30- க்கு நடைபெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

No comments:

Post a Comment