Friday, December 2, 2022

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை.



01.12.2022 கள்ளக்குறிச்சி 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1,000 ரூபாயும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 3,000 ரூபாயும், 9 முதல் பிளஸ் 2 வரை 4,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு 6,000, முதுகலைப் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு 7,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவி யர் கல்வி உதவித்தொகை பெற கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து, அடையாள அட்டை ஆதார் அட்டை, உரிய கல்விச் சான்று மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment