
11.12.2022 திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 18- ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை டிச.18- ஆம் தேதி காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடத்தவுள்ளது.
அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இம்முகாமில், 18 முதல் 35 வயது வரையுள்ள காதுகேளாத மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கூகுள் லிங்கில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொழிற்பயிற்சியில் சேரவும், கடனுதவி பெறவும் விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
திருமணம்: திருமணம் செய்துகொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருவாரூர் லயன்ஸ் சங்கம் மூலம் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதால், அவர்களும் இம்முகாமில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment