Saturday, December 10, 2022

கிராம உதவியாளர் பணியிடம்: மாற்றுத்திறனாளிக்கு 4 சதவீதம்



திருப்பூர்-'கிராம உதவியாளர் பணியிடத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள, 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு விபரம் வெளியிடப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் முறையிட்டதை அடுத்து, இட ஒதுக்கீடு கிராம உதவியாளர் பணியிலும் பின்பற்றப்பட வேண்டுமென, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தர விட்டு உள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், 'பார்வைத்திறன் குறைபாடு, காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகளுக்கு, 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.


No comments:

Post a Comment