Sunday, November 24, 2019

சிங்கப்பூரில் சைகை மொழி பயிற்சி மாணவர்கள் பங்கேற்பு!!

20.11.2019
திவ்யாங் டெவலப்மென்ட் சொசைட்டி (டிடிஎஸ்) என்ற அமைப்பு காது கேளாதோருக்கான சர்வதேச அளவில் தனித்துவமான சைகை மொழியை உருவாக்கியது.

சர்வதேச சைகை மொழிக்கான பாடத்தை கற்பிக்கும், பயிற்சி வகுப்புகள் சிங்கப்பூர் காது கேளாதோர் சங்கம் சார்பாக சிங்கப்பூரில் நடந்தது.

இதில், இந்தியாவை சேர்ந்த 13 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு சர்வதேச அளவிலான சைகை மொழியை கற்றுக் கொண்டனர்.

25-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா கடந்த 8ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி வரை கொல்கத்தாவில் நடந்தது.

இதற்கிடையில், சர்வதேச குழந்தைகள் தினம் 14-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தின விழாவை கொண்டாடும் விதமாக, கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு நாள் முழுவதும் குழந்தைகளுக்காக பல அனிமேஷன் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இதில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment