24.11.2019
கோவை : பொள்ளாச்சி, கோட்டூர், மலையாண்டிபட்டினம், திருவள்ளுவர் காலனி பகுதியில் வசிப்பவர் ராஜன். இவருடைய மனைவி கலாமணி. விவசாயக் கூலி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் வினு பிரபு (வயது 16), இவன் பத்தாம் வகுப்பு அவிநாசி பகுதியில் உள்ள தெக்கலூர் காது கேளாதோர் பள்ளியில் படித்து வருகிறான். விடுதியில் தங்கி உள்ளான்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற்றோருக்கு செல்போன் மூலமாக அழைப்பு வந்தது. அப்போது அவர்கள் வினுபிரபு வயிற்று வலி காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருப்பதாகவும் கோவை அரசு மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருந்தனர்.
அதனடிப்படையில் தாயும், தந்தையும் இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மகனைப் பார்த்தனர். அப்பொழுது கழுத்து நெறிக்கப்பட்டு தற்கான, தற்கொலை முயற்சி செய்து கொண்டதற்கான தடம் இருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் தனது மகனை விடுதியில் உள்ளவர்கள் அடித்து துன்பப்படுத்தி உள்ளனர். என் மகனுக்கு வயிற்று வலி எதுவும் கிடையாது என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆதலால் ஹாஸ்டலில் என் மகனை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுது புலம்பினர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றன. இந்த சம்பவம் சற்றுமுன் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை : பொள்ளாச்சி, கோட்டூர், மலையாண்டிபட்டினம், திருவள்ளுவர் காலனி பகுதியில் வசிப்பவர் ராஜன். இவருடைய மனைவி கலாமணி. விவசாயக் கூலி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் வினு பிரபு (வயது 16), இவன் பத்தாம் வகுப்பு அவிநாசி பகுதியில் உள்ள தெக்கலூர் காது கேளாதோர் பள்ளியில் படித்து வருகிறான். விடுதியில் தங்கி உள்ளான்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற்றோருக்கு செல்போன் மூலமாக அழைப்பு வந்தது. அப்போது அவர்கள் வினுபிரபு வயிற்று வலி காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருப்பதாகவும் கோவை அரசு மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருந்தனர்.
அதனடிப்படையில் தாயும், தந்தையும் இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மகனைப் பார்த்தனர். அப்பொழுது கழுத்து நெறிக்கப்பட்டு தற்கான, தற்கொலை முயற்சி செய்து கொண்டதற்கான தடம் இருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் தனது மகனை விடுதியில் உள்ளவர்கள் அடித்து துன்பப்படுத்தி உள்ளனர். என் மகனுக்கு வயிற்று வலி எதுவும் கிடையாது என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆதலால் ஹாஸ்டலில் என் மகனை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுது புலம்பினர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றன. இந்த சம்பவம் சற்றுமுன் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment