Sunday, November 24, 2019

ஐந்து சிறப்பு பள்ளிகளுக்கு ரூ.1.8 லட்சத்தில், 'ஐ -- பேட்'

12.11.2019
அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள் பயிலும், சிறப்பு பள்ளிகளுக்கு, 'ஆவாஸ்' மொன்பொருள் அடங்கிய, 1.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து 'ஐ - பேட்'டை, சென்னை கலெக்டர் வழங்கினார்.

'ஆவாஸ்' என்ற மென்பொருள் காதுகேளாதோர், வாய் பேச முடியாதோருக்கு உதவக்கூடியது. இதை பயன்படுத்தி, 'ஆட்டிசம்' உள்ளிட்ட அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள், பேச நினைக்கும்கருத்தை எளிதாகப் பரிமாறிக் கொள்ளலாம்.சென்னை மாவட்டம் மற்றும் நலத்துறை சார்பில், அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள் பயிலும், ஐந்து சிறப்பு பள்ளிகளுக்கு, 1.8 லட்சம்ரூபாய் மதிப்பிலான, 'ஆவாஸ்' மென்பொருள் அடங்கிய, ஐந்து ஐ - பேடை, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி நேற்று வழங்கினார்.இதுவரை, 30 சிறப்பு பள்ளிகளுக்கு, 11.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ஆவாஸ்' மென்பொருள் அடங்கிய, 30 ஐ - பேட் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment