கடலூரில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளதாக, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை இ.ஏஞ்சலின் வசந்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூரில் செயல்படும் செவித்திறன் பாதிப்புடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கு, 5 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உணவு, உடை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9442526871, 6380305723 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment