Friday, July 28, 2023

கடலூரில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை



 கடலூரில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளதாக, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை இ.ஏஞ்சலின் வசந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூரில் செயல்படும் செவித்திறன் பாதிப்புடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கு, 5 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உணவு, உடை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9442526871, 6380305723 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment