நாமக்கல் மாவட்டத்தில் கண் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அலைபேசி (ஸ்மார்ட் போன்) பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வை குறைபாடுடையோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கு விலையில்லா அலைபேசிகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கு 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் தகுதி பெற்றவர்கள். பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்கள் (மாற்றுத்திறன் தன்மை 80 முதல் 100 சதவீதம் வரை இருத்தல் வேண்டும்). உயர்கல்வி பயில்பவர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சுயத்தொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளாக இருத்தல் வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய அடையாள அட்டை நகல், கல்வி பயில்வதற்கான சான்றிதழ், பணிச் சான்றிதழ். சுயதொழில் புரிவதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்; கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment